வாகன ஓட்டிகளுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸிற்கான (அனுமதிச் சீட்டு) பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாகன ஓட்டிகளுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
” உத்தரவாதமான வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஒதுக்கப்படும். 1 NICக்கு 1 வாகனம், வாகன சேஸ் எண் & விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் QR குறியீடு ஒதுக்கப்படும். QR உடன் எரிபொருளை நிரப்புவதற்கான இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தின் 2 நாட்கள்” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்தார்.
“மக்கள் இப்போது பதிவு செய்யலாம், இது எப்போது செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்”என குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்ய http://fuelpass.gov.lk/

பிறசெய்திகள்



