
ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாதளவில் தற்போது வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில் போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பஅலையால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய நாள்களாக லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் மேற்கத்திய பகுதியில் வெப்ப அலை அதிகரித்துள்ளது. இவற்றில் போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் அதிகளவு பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் அங்கு காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளது.
இதனால் போர்த்துக்கல் நாட்டில் மாத்திரமே கடந்த வாரம் 659 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பொதுச்சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அண்டை நாடான ஸ்பெய்னிலும் வெப்பம் காரணமாக இதுவரை 368 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் அந்த நாடுகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





