இலங்கையின் ஜனாதிபதி இன்னும் சில மணிநேரங்களில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சேலைன் போத்தலோடு வைத்தியசாலையிலிருந்து நாடாளுமன்றம் வந்து வாக்களித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக அவர் முன்னுரிமை அடிப்படையில் தமது வாக்கினை பதிவு செய்திருந்ததுடன், வாக்களித்ததன் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.


பிறசெய்திகள்





