செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள் நான்கு சிக்கியது!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

தற்போது செல்லுப்படியான வாக்குகளை கணக்கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு பெட்டிக்குள்ளும், செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள் மற்றொரு போட்டிக்குள்ளும் போடப்படுகின்றன.

அதில், நண்பகல் 12 மணிவரையிலும் ஒரு வாக்குச்சீட்டு செல்லுப்படியற்ற வாக்குச் சீட்டு பெட்டிக்குள் ஒதுக்கப்பட்டது.

வாக்குகளை எண்ணும் செயற்பாடுகளை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஹரின் பெர்ணான்டோவும், டலஸ் அழகபெரும சார்பில் டிலான் பெர்ணான்டோவும், அனுரகுமார திஸாநாயக்க சார்பில், வி​ஜித ஹேரத்தும் கண்காணிக்கின்றனர்.

இதேவேளை, இதுவரையில் செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள் நான்கு சிக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply