ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன?
-கேதீஸ்-
மிகவும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி அடைந்திருந்தார்.
யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கும் கூட்டங்கள் பல கட்சிகளாலும் 19 ஆம் திகதி இடம்பெற்று இருந்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் ஜனாதிபதி தெரிவு தொடர்பில் எவ்வாறான முடிவு எடுப்பது எனும் கலந்துரையாடல் TNA 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு பற்றுததுடன் இடம்பெற்று இருந்தது.
இதன் போது டலஸ் அழகு பெருமவுக்கு ஆதரவு தெரிவிப்பதை எம். பிக்களான சுமந்திரன், சாணக்கியன், சம்பந்தன் ஆகியோரை தவிர ஏனையோர் விரும்பவில்லை என அறியமுடிகிறது.
ரணிலுக்கு ஆதரவு வழங்கலாம் அல்லது நடுநிலையாக இருக்கலாம் என்ற கருத்துக்களே அங்கு முன் வைக்கப்பட்டிருந்தன.
அண்மைக்காலமாக நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்ட எம் ஏ சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் ரணிலை எதிர்ப்பது எனவும் டலசுக்கு ஆதரவு வழங்குவது என்பதில் குறியாக இருந்துள்ளார்கள்.
பொது வெளியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கட்சிக்குள்ளும் டலசுக்கு ஆதரவு வழங்குவதற்கு எதிரான கருத்துக்களே முன்வைக்கப்பட்டு வந்திருந்தன. தமிழரை எதிர்க்கும் ஒரு இனவாத போக்குடையவர் அவரை ஆதரிப்பதை விட நடுநிலையாக இருக்கலாம் அல்லது ரணிலுக்கு ஆதரவு வழங்கலாம் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று இருந்தாலும் இவர்கள் ரணிலை எதிர்க்கும் விடயத்தில் குறியாக இருந்து செய்தமை தங்களுடைய தனிப்பட்ட குரோதத்துக்காக பழி தீர்க்கும் வகையில் கட்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற விடயம் தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரணில் வெல்லும் வாய்ப்புக்களே வலுவாகத் தெரிந்திருந்தும்
தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கு தீர்வு காணும் வகையில் கிடைக்கின்ற வாய்ப்புகளை பேரம் பேசி தீர்க்க முயற்சிக்காமல் தனிப்பட்ட விடயங்களுக்காக சந்தர்ப்பத்தை சீர்குலைக்கும் செயலாகவும் இது மக்கள் மத்தியில் நோக்கப்படுகிறது.
டலசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை இந்திய தூதரகம் தற்போது அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்
19ஆம் திகதி என்ன நடந்தது என்கின்ற விடயத்தை தமிழ் பக்கம் இணையம் விபரித்துள்ளது அதனை இங்கே தருகின்றோம்.





