கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீறியதில் பெரும்பான்மையானர்கள் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள்!

ஸ்கொட்லாந்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள், கொவிட் முடக்கநிலைகளின் போது அபராதம் பெறுவதற்கான வாய்ப்பு 2.6 மடங்கு அதிகம் என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கொவிட் கட்டுப்பாடு விதிகளை மீறியதற்காக 2020-21 ஆம் ஆண்டில் 20,000க்கும் அதிகமானோர் பொலிஸாரின் அபராத அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர்.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வின்படி, அனைத்து அபராதங்களில் முக்கால்வாசி 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொற்றுநோயின் தொடக்கத்தில், தாழ்த்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபராதம் விதிக்க 12.6 மடங்கு அதிகமாக இருந்தது.

சமூக விரோத நடத்தைக்காக வழங்கப்படும் அபராதத்தை விட, கொவிட் விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு வழங்கப்படும் அபராதம் அதிகமாக செலுத்தப்படுவதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

Leave a Reply