
9 வயதுச் சிறுமியை ரயிலில் கடத்திச் சென்றவர் கைது!
கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் பயணிக்கும் சிறுமி அச்சமுற்று காணப்படுவதாக மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து மஹரகம ரயில் நிலையத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த சிறுமியை மீட்டதுடன், பேராதனையை சேர்ந்த 30 வயதான சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.
கடந்த 03 ஆம் திகதி எசல பெரஹர பார்க்கச்சென்றிருந்த சிறுமியை அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியை காணவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்