
முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச் சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இளைஞர்களில் ஒருவர் 22 வயதுடையவர்.
அவர் கள்ளப்பாடு தெற்கினைச் சேர்ந்தவர். மற்றையவர் 21 வயதுடையவர். அவர் உண்ணாப்பிலவைச் சேர்ந்தவர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





