அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஆசிரியை இன்று உயிரிழந்தார்.
தெனியாய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட, ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், அதற்கு முன்னரே அவர் உயிரிழந்தார்.
28 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.




