கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் 4 பேர் கைது

<!–

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் 4 பேர் கைது – Athavan News

கொழும்புல் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேற்கு பொலிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணி மீது கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply