அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடந்த ஒரு வார காலமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது கடும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ளநீர் பெருக ஆரம்பித்துள்ளன.
தற்போது வயல் நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயல் நிலங்களும் நீரில் மூழ்கி வருகின்றன.
தொடர் கன மழை பெய்வதால் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில தாழ்நிலப் பகுதிகளில், வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய வாய்ப்பும் உள்ளன.
எனவே, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் மாவட்ட அனர்ந்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.