ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் திடீர் மரணம்

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளரான அப்துல்சாலி முஹம்மத் றியாழ் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.

உடல் அசௌகரியம் ஏற்பட்டதை அடுத்து அவர் சுயமாக தனது வாகனத்தில் செங்கலடியிலுள்ள மருத்துவரிடம் சிகிச்சை பெறச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு வைத்தியர் அவரை பரிசோதனை செய்து கொண்டிருக்கும்போது ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் றியாழ் திடீரென மரணமடைந்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையில் அமர்வு நேற்று இடம்பெறவிருந்த நிலையில் ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளரின் மரணத்தில் பின்னர் பிற்போடப்பட்டுள்ளதாக நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழிம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *