மூதூரில் அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுப்பு

வடக்குகிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி “100 நாள் செயல்முனைவு” எனும் தொணிப் பொருளின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் 88வது நாளான இன்று வியாழக்கிழமை (27) மூதூர் – இரால்குழி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் கவனயீர்ப்பில் பெண்கள் அமைப்பினர், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோர் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும் ,ஒன்றுகூடுவது எமது உரிமை உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது.அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இத்தனை வருடங்களாக தேர்தல் காலங்களில் வாக்களிக்கின்றோம்.எனினும் இதுவரை கண்டபயன் எதுவுமில்லை.இவர்கள் அரசியல் தீர்வுகளை பெற்றுத்தரவில்லை.

பசளை தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்டவைகளால் பொதுமக்களால் நாம் அவதியுறுகின்றோம் இதுவரை எந்தவித தீர்வுகளும் எட்டப்படவில்லையெனவும் தெரிவித்தனர்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *