
காஸ்மீர் மக்களின் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில், காஸ்மீர் கறுப்பு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் சபையின், இலங்கை அலுவலகத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் இந்தியத் தூதரகத்தின் முன்பாகவும் ,பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும், அப்பாவி மக்களை இரக்கமற்ற முறையில் நடாத்துவதையும் எதிர்த்து கோசமிட்டவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் ஜக்கிய நாடுகள் சபையும், ஜ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வினை ஏற்படுத்தி தரவேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் ,காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடாத்துவதக்குற்கு , உலக நாடுகள் அங்ககீகாரம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்