யாழில் இரு தரப்பிணருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ! படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

யாழில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று இரவு யாழ்.தாவடி மதுபான நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தள்ளனர்.

கோண்டாவில் மற்றும் இணுவிலைச் சேர்ந்த முறையே 34 மற்றும் 30 வயதுடைய ஆண்களே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *