கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை படுகாயம்!

<!–

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை படுகாயம்! – Athavan News

கிளிநொச்சி – பளை புதுக்காட்டு சத்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அருட்தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *