ரயிலில் இருந்து கீழே இறங்க முயன்ற மாணவி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் சிறுநீரக பைகள் பலத்த சேதமடைந்து ரத்தம் கசிந்து உள் உறுப்புகள் உடலில் பதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா (20) உயிரிழந்தார்.
தினமும் தன் ஊரில் இருந்து கல்லூரிக்கு ரயிலில் செல்வது வழக்கம். புதன்கிழமை விசாகப்பட்டினம் மாவட்டம் துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர் ராயகடா பயணிகள் ரயிலில் இருந்து மாணவி சசிகலா கீழே இறங்க முயன்றார்.
அப்போது மாணவி வழுக்கி விழுந்ததில் அவரது இடுப்பு ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிக் கொண்டது.
இதை கவனித்த ரயில் போலீசார் மற்றும் சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்தி, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் நடைபாதையை உடைத்து மாணவியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் எதிர்பாராதவிதமாக மாணவியின் மரணம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post புகையிரதத்திற்கும் நடைபாதையின் மேடையின் இடையேயும் சிக்கிய கல்லூரி மாணவி ! பின்னர் நடந்த பரிதாபம் ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.