யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில், இந்தியாவின் எட்டையப் புரத்தில் பிறந்த மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்று யாழ் அரசடி வீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை அணிவித்தார்.
இவ் நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.