நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 5000ஐ கடந்தது!

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனா மரணங்களும் உச்சத்தை தொடுகின்றது.

அதாவது நேற்றும் 98 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5ஆயிரத்து 17ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 5000 ஐ கடந்தது.

மேலும் உயிரிழந்தவர்களில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *