திருகோணமலை – மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. தோப்பூர், கிளிவெட்டி, மனைச்சேனை உள்ளிட்ட தூரப் பகுதிகளிலிருந்து மூதூர் தள வைத்தியசாலைக்கு மருந்துகள் பெறுவதற்காக வருகைதந்த பல நோயாளர்கள் மருந்துகள் பெறாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அத்தோடு அவசர சிகிச்சை பிரிவு வழமைபோன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.