ஹட்டன் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

ஹட்டன்,மார்ச் 28 ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, தியகல பகுதியில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த பிரதிப் குமார அஸ்விஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்களில் வந்தவர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.

The post ஹட்டன் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி appeared first on Tamilwin Sri Lanka.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *