யாழில் பெண்ணும் மாணவனும் செய்த இழிவான செயல் ! மேலும் 10 பேர் கைது !

யாழ்.மாவட்டத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் வியாபாரி ஒருவரிடம் ஹெரோயின் வாங்கிய 10 வாடிக்கையாளர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும், கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் வியாபாரி நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போதைப்பொருள் வாங்கியவர்கள் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

The post யாழில் பெண்ணும் மாணவனும் செய்த இழிவான செயல் ! மேலும் 10 பேர் கைது ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *