மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய தயாராகும் அரசு! சுகாதார சங்கம் வெளியிட்ட தகவல் samugammedia

அதிக விலைக்கு மருந்துகள் வாங்குவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மேலும் இரண்டு மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய அரசு தயாராகி வருவதாகவும் சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

7000 ரூபாவுக்கு விற்கப்படும் கான்சிக்ளோவியன் என்ற வைரஸ் தடுப்பு மருந்தை 77,000 ரூபாவுக்கும், 200 ரூபா பெறுமதியான லினோசோலிட் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை 2200 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முயற்சி நடந்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களால் நாடு தேவையற்ற கடனாளியாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *