கடுமையான குற்றவாளிகளில் இருந்து சிறு குற்றவாளிகளை பிரிக்க திட்டம்! samugammedia

சிறிய குற்றங்களுக்காக சிறையில் இருக்கும் கைதிகளை பாரிய குற்றவாளிகளுடன் கலப்பதை தடுக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த விடயம் குறித்து குழுவொன்று ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *