வட மாகாண வைத்திய சுகாதார உதவிப் பணியாளர்கள் இன்றையதினம்(03) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.




இன்று மதியம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், செயலக உத்தியோகத்தர் ஒருவரிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தாம் உணவுதவிர்ப்பு, கவணயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டபோது, தமது நியமனத்திற்கு அமைய பணியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் இதுவரை அது நடைபெறவில்லை என வட மாகாண வைத்திய சுகாதார உதவி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




