நீர் வற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு! samugammedia

மவுசாகல நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்து உள்ளது இதன் காரணமாக நீர் வற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு.

மின்சார சபைக்கு உரித்தான மவுஸ்சாக்கலை நீர் தேக்கதின் தற்போது பாரிய அளவில் நீர் குறைந்து உள்ளது.

இந்த நிலையில் சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்று வருகிறது.

அப் பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களை மையமாக கொண்டு இந்த சட்ட விரோதமான மாணிக்க கற்கள் அகழ்வு இடம் பெற்று வருகிறது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா பொலிசார் மற்றும் இலங்கை மின்சார சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *