ஈஸ்டர் பண்டிகயை முன்னொட்டு நாடு முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் நாளை பிற்பகல் இடம்பெற உள்ள ஈஸ்டர் ஆராதனைகளுக்கு பெருந்திரளான மக்கள் வருகைத் தர உள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை முதல் ஈஸ்டர் திருநாள் முடியும் வரை ஆலயங்களுக்கு வெளியில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதைக்காணக்கூடியதாக இருக்கின்றது.
கடந்த 2019ம் ஆண்டில் ஏப்ரல் 21இல் பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலையடுத்து பாதுகாப்பு இம்முறையும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிிஸார் தெரிவித்தனர்.