தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!samugammedia

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்கள் கடந்த நான்கு தினங்களாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

சுகயீன விடுமுறை கொடுப்பனவிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றதால் இன்று பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு சேவைக்கு திரும்பியதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *