இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் இரண்டாவது தொகுதி நாளை (08) வெளியிடப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முட்டை மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைகளை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் நாளை வழங்க உள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இது குறித்து தெரிவிக்கையில்;
“.. கால்நடை தீவனத்திற்கு விதிக்கப்படும் VATயை நீக்கினால், ஒரு முட்டையில் இருந்து 6 ரூபாயை குறைக்க முடியும். அப்படியானால், முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் உள்நாட்டு முட்டைகள் 06 ரூபாவால் குறைக்கப்படும்..”என தெரிவித்தார்.