யாழில் லஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்!samugammedia

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த  சாவகச்சேரி   பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்  உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்மஞ்சுள செனரத் தெரிவித்தார்

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலீஸ் சாஜனுக்கு 50ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்கமுற்பட்ட போதிலும் குற்றச்செயலுடன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலீஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து  சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *