பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).
இங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள முல்லை ஓய்வகம் (Hotel – Mullai) மற்றும் றீச்சா தேவாலயம் (reecha Church) என்பன நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
றீச்சா தேவாலயம், முல்லை ஓய்வகம்
நாளைய தினம் (11.04.2023) காலை 11 மணியளவில் றீச்சா தேவாலயமும், மதியம் 12 மணியளவில் முல்லை ஓய்வகம் எனும் பெயரில் 35 அறைகளுடன் கூடிய விடுதியும் திறந்து வைக்கப்படவுள்ளது.
முல்லை ஓய்வகத்தினை ராசையா ரஞ்சித் லியோன் (லண்டன்) திறந்து வைக்கவுள்ளார்.
மேலும், றீச்சா தேவாலயத்தை அருட்தந்தை அன்புராசா, அருட்தந்தை ஜெயந்தன் மற்றும் அருட்சகோதரர் ஜெனிஸ்ரன் ஆகியோர் திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post நாளை திறப்புவிழா காண இருக்கும் றீச்சா தேவாலயம், மற்றும் முல்லை ஓய்வகம் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.