மூதூர் கட்டைபறிச்சான் சிறி கற்பக விநாயகர் ஆலய தேர்த் திருவிழா! samugammedia

மூதூர் -கட்டைபறிச்சான் சிறி கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவத்தின் 09 ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (13) காலை தேர் திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது விநாயகப் பெருமான் தேரில் அமர்ந்தவாறு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

இவ் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கட்டைபறிச்சான் சிறி கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் கடந்த 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பாகியிருந்ததோடு நாளை வெள்ளிக்கிழமை காலை இடம்பெறும் தீர்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply