புத்தாண்டு தினத்தில் மைத்திரியின் வீட்டில் இடம்பெற்ற சம்பவம்..!samugammedia

தமிழ் சிங்கள  சித்திரைப் புத்தாண்டு தினமான  இன்றையதினம்(14) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசியல் தலைவர்களும் தமது இல்லங்களில் குடும்பத்தினருடன் இணைந்து புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன் வீட்டு வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply