யாழ் கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட விஷேட குழவினர்! samugammedia

இந்தியாவிலிருந்து வருகைததந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்  சபையினுடைய பனை ஆராய்ச்சி  நிறுவனத்தை பார்வையிட்டனர்.

இன்று காலை 12.30 மணியளவில்  வருகைதந்த இந்தியாவின் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் என்.ஏ.கோன்  (N.A.khone) தலைமையிலான குழவினர் பனை ஆராய்ச்சி  நிறுவனத்தின்  ஆய்வுகூடங்களை பார்வையிட்டனர். மேலும் பனைசார் உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டனர்.

 

இது தொடர்பில் இலங்கை பனை  ஆராய்ச்சி நிறுவன பிரதிபொதுமுகாமையாளர் ஸ்ரீவிஜிந்தன், இந்தியாவின் சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் என்.ஏ.கோன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்த்தக்கது 

Leave a Reply