வெசாக் தினத்தில் மீன் கடைகளுக்கும் பூட்டு…! மீனவர்கள் அதிருப்தி…!samugammedia

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இன்று தொடக்கம் மூன்று தினங்களுக்குட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை வரையில் வெசாக் தினத்தை முன்னிட்டு இறைச்சி கடைகளுடன் மீன் கடைகளையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறித்து மீனவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு வழமையாக இறைச்சிக்கடைகள் மட்டுமே மூடுவதாகவும் ஆனால் தற்போது மீன்கடையினையும் மூடுமாறு பணித்துள்ளமையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் மூன்று தினங்களுக்குரிய மீன்களை சேமித்து வைத்திருந்த நிலையில் மாநகரசபையின் அறிவிப்பானது தமக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மாநகரசபையின் ஆணையாளர் என்.மதிவண்ணனிடம் கேட்டபோது,

வழமையாக இறைச்சிக் கடைகளை வெசாக் தினத்தில் மூடுவதற்கான அறிவுறுத்தலை வழங்குவதாகவும் இம்முறை அரசாங்கம் புதிதாக மீன்கடைகளையும் மூடுமாறு பணித்துள்ளதாகவும் இது தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிவருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *