ஒரு நொடியில் தடம் புரண்ட வாழ்க்கை…!இளம் ஜோடிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி – உயிரிழந்த யுவதி தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்…!samugammedia

கொஸ்லாந்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார். 23 வயதான கவிசா இயூஜின் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 23 வயதான தனுஷ்க மற்றும் இயூஜின் நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருதால் பிரபலயம் அடைந்துள்ளனர்.

அவ்வாறு காணொளி ஒன்றை பதிவு செய்யும் நோக்கில் நேற்று மாலை 6.30 மணியளவில் உடதியலுமை பகுதிக்கு இந்த இளம் ஜோடி சென்றிருந்தது.

எனினும், இந்த பயணம் இயூஜினின் இறுதிப் பயணமாகவே அமைந்தது. காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் இன்று காலை சென்று பார்த்த போது தனுஷ்க மதுஷான் காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

மாத்தறை – கெக்கனதுர பகுதியை சேர்ந்த இவர் மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தாதி மாணவியான உயிரிழந்த யுவதி அடுத்த வாரமளவில் தாதி நியமனம் பெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *