அதிகரிக்கும் நோய்த் தொற்று: கல்வி அமைச்சர் பாடசாலைகளுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!samugammedia

பாடசாலை விடுமுறை நாட்களில், பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதற்கு பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாதுக்க பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதனால் டெங்கு அபாயத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply