அந்த மூன்றும் எனக்குத் தேவையில்லை..! அரசு பக்கம் தாவியுள்ள வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.!samugammedia

பெருந்தோட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கின்ற அனைத்து வேலைத் திட்டங்களையும் முன்னின்று செயற்படுத்தப்போவதாகவும் இதற்கு கட்சிகளோ, சின்னங்களோ மற்றும் வர்ணங்களோ தேவையில்லை என தற்போது அரசாங்கத்தின் பக்கம் சென்றுள்ள வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 120 குடும்பங்களுக்கு காணி உறுதி  பத்திரம் வழங்கும் நிகழ்வு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ மற்றும்  சங்கத்தின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே வடிவேல் சுரேஷ் இவ்வாறு உரையாற்றியிருந்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மக்களுக்கு நன்மை கிடைக்கும் அனைத்து வேலை திட்டங்களிலும் நான் முன்னின்று  செயல்படுவேன்.

கட்சிகளோ, சின்னங்களோ, வர்ணங்களோ எனக்குத் தேவையில்லை என்னுடைய மக்களின் அபிவிருத்தி செயல்பாடுகளே எனக்கு முக்கியம்  எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் காணி பகிர்வு தொடர்பாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்ற ரீதியில் தலைவரும் நானும் முன்னின்று செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply