ஒலிம்பியாட் போட்டி..!அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாராட்டு..!samugammedia

அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அக்கரைப்பற்று வலய பாடசாலைகளுக்கிடையிலான  Olympiad போட்டி அண்மையில் இடம்பெற்றது.
மேற்குறித்த போட்டி நிகழ்ச்சியில் அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட ஜே.இஸ்ஸத் பானு, எம்.எம்.அஹமட் ஆகியோர் கூடிய புள்ளிகளை பெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றிபெற்று தமது பாடசாலைக்கும், கோணாவத்தை பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் இருவருக்கும் பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர் எஸ்.எம்.றியாப், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.

Leave a Reply