கல்லடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!samugammedia

கிழக்குபல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வு மாணவர்களின் பங்கேற்புடன்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இதன் பொழுது உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைசுடரேற்றி அகவணக்கம் செலுத்தியோடு மலரஞ்சலியும்  இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply