வசந்த முதலிகே மீண்டும் கைது: நள்ளிரவில் பொலிஸார் நடவடிக்கை! samugammedia

அனைத்து பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்றையதினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு கண்டி வீதியை நோக்கிபேரணியாக சென்றதையடுத்து, அங்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Leave a Reply