சிறுத்தையின் தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியர் எஸ்.ஏ.கே.ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பிரிட்வெல் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போதே புதன்கிழமை (24) தோட்டத் தொழிலாளி சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அவருடைய முகத்தில் கடுங்காயம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கையையும் கடித்து காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
அந்தச் சிறுத்தையை காட்டுக்கு விரட்டியடிக்குமாறு நல்லத்தண்ணி வனசீவராசிகள் அலுவல உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்