தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர்களில் ஒருவரின் சகோதரனால் 12 வயதுச் சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, தம்புள்ளை பொலிஸின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர், விசாரணைகளின் பின்னர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.