யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் எதிர்வரும் 27.05.2023 அன்று சர்வதேச யோகா தினத்தை நோக்கிச் செல்லும்போது என்னும் கருப் பொருளில் சர்வதேச யோகதினப் பயிற்சிப்பட்டறை இன்று யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதக பதில் தூதுவர் ராம்கேஷ் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு (காலை 7-9 மணி) மற்றும் புதன் (மாலை 5-7 மணி) வரை இலவச யோகா வகுப்புகளுக்கு எங்களுடன் சேருங்கள் ஆரோக்கியத்தைத் தழுவி, எங்களுடன் யோகாதினத்தைக் கொண்டாடுங்கள் என யாழ். இந்திய உதவித்தூதரகம் அறிவித்துள்ளது.
இதில் கலைஞர்கள், சான்றோர்கள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.