திருகோணமலையில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவல் – 100க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு! samugammedia

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பகுதியில் தோல் கழலை நோய்த் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்து வருவதாக  கால் நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

.

கந்தளாய், முள்ளிப்பொத்தானை தம்பலகாமம், வான்எல அக்போபுர மற்றும் ரஜஎல பேராறு போன்ற இடங்களில் இவ் நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இதனால்  நூற்றுக்கும் மேற்பட்ட கால் நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும்,இந்நோய் தாக்கம் அதிகரித்துள்ள  கால்நடைகள் மேய்ச்சலில் நாட்டமின்மையாக இருப்பதாகவும்  பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

எனினும் பரவி வருகின்ற  இந்நோய்க்கு   தடுப்பூசி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன இதனால் கால் நடை பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply