கப்பலில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த கடற்படை வீரர்..! samugammedia

கடற்படை கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் நேற்று (14) கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் 44 வயதுடைய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply