யாழ். வரலாற்று சிறப்புமிக்க ஆலய பாலஸ்தானம் செய்யப்பட்ட தேவஸ்தானத்தில் வருடாந்த சங்காபிஷேகம் samugammedia

யாழ். வரலாற்று சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஐப்பெருமாள் தேவஸ்தானத்தின்  பாலஸ்தானம் செய்யப்பட்ட வருடாந்த சங்காபிஷேகம் இன்று தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

2024 ஆம்ஆண்டில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இவ்வாண்டில் சங்காபிஷேகம் இடம்பெற்றது.

ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள், சீதேவி, பூமாதேவி, ஸ்ரீ.மகாலட்சுமி, ஸ்ரீ வேணுகோபாலர், ஸ்ரீ ரெங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளிட்ட எனைய பரிவார தெய்வங்களுக்கு விஷேட அபிஷேசக தீப ஆராதனைகள் இடம்பெற்றன.

இவ் சங்காபிஷேக கிரியைகளை ஆலய பிரதம குரு இ.ரமணீஸ்வரக்குருக்கள் நடாத்திவைத்தார்.

இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

Leave a Reply