முச்சக்கர வண்டியை பின்னால் எடுக்கும்போது நேர்ந்த விபரீதம் : ஒருவர் உயிரிழப்பு

தம்புள்ளை – கந்தளம வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பின்னோக்கிச் செல்ல முற்பட்ட போது பாறையில் இருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கந்தளம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply