அரச தொழிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! samugammedia

96 மொழிபெயர்ப்பாளர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையினால் அரச நிறுவனங்களின் பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அஷோக தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள். ஆட்சேர்ப்பில் உள்ளீர்க்கப்படும் அதிகாரிகள் குறைந்தது 02 மொழிகளை அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், போட்டிப் பரீட்சையின் பின்னர் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply