திருகோணமலை – தோப்பூர் பொதுச் சுகாதார பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை வீடுகள் தோறும் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இம்மாதம் 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் தேசிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு விசேட தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தோப்பூர் பிரதேசத்திலுள்ள வீடுகள், வெற்றுக் காணிகள், தனியார் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்ததோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
பரிசோதனை நடவடிக்கையில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி ஹிஹ்மி முகைதீன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு தடுப்பு உதவியாளர்கள், பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.